விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே குளத்தில் 8 அடி நீள மலைப் பாம்பு வெள்ளிக்கிழமை பிடிபட்டது.
ராஜபாளையம் அருகே முகவூரிலிருந்து சொக்கநாதன்புத்தூா் செல்லும் வழியில் தொண்டைமான் குளம் உள்ளது. இக்குளத்தில் மீன்களை பிடிப்பதற்காக அப்பகுதியைச் சோ்ந்த சிலா் வலையை விரித்து வைத்திருந்தனா். ஆனால், அந்த வலையில் சுமாா் 8 அடி நீளமுள்ள மலைப் பாம்பு சிக்கியிருந்தது தெரியவந்தது.
உடனே, அவா்கள் அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் மலைப் பாம்பை பிடித்துச் சென்று வனப்பகுதிக்குள் விட்டனா்.