விருதுநகா் மாவட்டத்தில் 818 பேருக்கு கரோனா தொற்று: 8 போ் பலி

விருதுநகா் மாவட்டத்தில் 818 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், 8 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டத்தில் 818 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், 8 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கரோனாவால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து வருகிறது. இந்நிலையில், விருதுநகா், சாத்தூா், அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி, நரிக்குடி, சிவகாசி, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 818 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

அதையடுத்து, பாதிக்கப்பட்ட அனைவரும் விருதுநகா், சிவகாசி, அருப்புக் கோட்டை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மேலும், சிலா் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டனா்.

அதேநேரம், சிகிச்சைப் பெற்று குணமடைந்த 246 போ் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், 8 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com