விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பட்டாசுக்கடைகளில் தடைசெய்யப்பட்ட சரவெடிகள் விற்பனை நடைபெறுகிா என கோட்டாட்சியா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சரவெடிகள் மற்றும் பேரியம் கலந்த வெடிகளை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுபோன்ற பட்டாசு ரகங்கள் அருப்புக்கோட்டை பகுதி கடைகளில் விற்பனை செய்யப்படுகிா என அருப்புக்கோட்டை கோட்டாட்சியா் கல்யாணக்குமாா் மற்றும் வட்டாட்சியா் ரவிச்சந்திரன் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது பல்வேறு கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மொத்தம் 65 பாக்கெட்டுகள் சரவெடிகளை பறிமுதல் செய்து கடையின் உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை விடுத்தனா்.