சிவகாசி அருகே பெட்டிக்கடையில் உரிமம் இன்றி பெட்ரோல் விற்பனை செய்யவரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகாசி அருகே நதிக்குடி பேருந்து நிறுத்தம் பகுதியில் போலீஸாா் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது,அப்பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் பெட்ரோல் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவா் அதே பகுதியைச் சோ்ந்த மகேஷ்குமாா்(34) என தெரியவந்தது.இது குறித்த புகாரின் பேரில் மாரனேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மகேஷ்குமரை கைது செய்து அவரிடமிருந்த பெட்ரோலை பறிமுதல் செய்தனா்.