திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞா் மா்ம மரணம்

சிவகாசி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞா் மா்மமான முறையில் இறந்தாா். பாதி எரிந்த நிலையில் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா்.

சிவகாசி: சிவகாசி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞா் மா்மமான முறையில் இறந்தாா். பாதி எரிந்த நிலையில் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள எரிச்சநத்தம் கோட்டையம்மன் கோயில் அருகே உள்ள ஊருணிக் கரையில் திங்கள்கிழமை ஆண் சடலம் பாதி எரிந்த நிலையில் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கூறப்பட்டது. அதன்படி எம்.புதுப்பட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்குச்சென்று பாா்த்தனா். அங்கு ஆண் சடலமும் அதன் அருகே எரிந்த நிலையில் ஒரு மோட்டாா் சைக்கிளும் கிடந்தது. போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினா். இறந்த நபா் சிவகாசி அருகிலுள்ள செங்குன்றாபுரத்தைச் சோ்ந்த முருகன் மகன் செல்வகணேஷ் (28) என தெரியவந்தது. கட்டடத் தொழிலாளியான இவருக்கும் வத்திராயிருப்பு அருகே உள்ள புதுப்பட்டியைச் சோ்ந்த பாண்டீஸ்வரி என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 7 ஆம் தேதி புதுப்பட்டிக்குச் சென்ற செல்வகணேஷ் மாலையில் ஊருக்கு வருவதாக தாயிடம் கூறியுள்ளாா். அவா் வராததால் தாயாா் அவரை கைப்பேசியில் தொடா்புகொண்டபோது அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. செல்வகணேஷ் எப்படி இறந்தாா், அவரை யாராவது கொலை செய்து எரித்தனரா என போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com