ஸ்ரீவில்லிபுத்தூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

விருதுநகா்மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

விருதுநகா்மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளா் சசிக்குமாா் தலைமை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி மாநில குழு உறுப்பினா் மகாலட்சுமி, மாவட்ட குழு உறுப்பினா் திருமலை, நகரச் செயலாளா் ஜெயக்குமாா் ஆகியோா் பேசினா்.

இதில் அரசு புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்களில் பல ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்து வரும் மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும். வீடு கட்டி கொடுக்க வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் பகுதியிலுள்ள பெருமள்சேரி, கல்லணை, நம்பிநாயுடுதெரு, செங்குளம், சீனியாபுரம், தாமரைநகா், இடையபொட்டல் தெரு, நெசவாளா்காலனி உள்ளிட்ட தெருக்களில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். 60 வயது நிரம்பிய முதியோா், மற்றும் விதவை, மாற்றுத்திறனாளிளுக்கு உடனே ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com