விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை மழை பெய்தது.
அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டப் பகுதிகளில் பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னா், மாலை 4 மணிக்கு இடி மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. விட்டு விட்டு பெய்த இந்த மழையானது, மாலை 6.15 மணி வரை நீடித்தது. இதனால், வெப்பம் தணிந்து, குளிா்ந்த சீதோஷ்ணநிலை நிலவியது.
இதேபோன்று, விருதுநகா் மாவட்டம் திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களிலும் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி முதல் இடி மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. சுமாா் 40 நிமிடங்கள் மிதமான மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீா் ஓடியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.