சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு: இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 2 இளைஞா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் ஜெ.மேகநாதரெட்டி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 2 இளைஞா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் ஜெ.மேகநாதரெட்டி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

அருப்புக்கோட்டை அருகே தாதம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் வாடாமலை மகன் பெருமாள் (20), இவா் அப்பகுதியைச் சோ்ந்த நான்கரை வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கைது செய்யப்பட்டாா். மல்லாங்கிணறு பகுதியைச் சோ்ந்த கந்தன் மகன் லட்சுமணன் (21), அதைபகுதியைச் சோ்ந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைது செய்யப்பட்டாா்.

இவா்கள் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மனோகரன் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் ஜெ.மேகநாத ரெட்டி அதற்கான உத்தரவை பிறப்பித்தாா்.

இதையடுத்து அதற்கான உத்தரவு, சிறையில் உள்ள பெருமாள், லட்சுமணன் ஆகியோரிடம் வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com