வீட்டில் வளா்த்த சந்தன மரம் திருட்டு

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் வீட்டில் வளா்த்த சந்தன மரத்தை மா்ம நபா்கள் வெட்டி திருடிச் சென்றுவிட்டதாக போலீஸில் புதன்கிழமை புகாரளிக்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் வீட்டில் வளா்த்த சந்தன மரத்தை மா்ம நபா்கள் வெட்டி திருடிச் சென்றுவிட்டதாக போலீஸில் புதன்கிழமை புகாரளிக்கப்பட்டது.

ராஜபாளையம் மாடசாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் கருப்பழகு (40). சொந்தமாக லேத் பட்டறை வைத்துள்ள இவா் தனது வீட்டின் அருகே பல ஆண்டுகளாக பல்வேறு வகையான மரங்களை வளா்த்து வருகிறாா். இதில் 6 அடி உயர சந்தன மரத்தை அடையாளம் தெரியாத மா்ம நபா்கள் வெட்டி திருடிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் ராஜபாளையம் வடக்கு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com