ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தீ: கணினி, கோப்புகள் சேதம்

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கல்லூரணி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் கணினி சாதனங்கள் மற்றும் கோப்புகள் எரிந்து சேதமடைந்துள்ளன.
கல்லூரணி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புதன்கிழமை ஏற்பட்ட தீ.
கல்லூரணி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புதன்கிழமை ஏற்பட்ட தீ.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கல்லூரணி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் கணினி சாதனங்கள் மற்றும் கோப்புகள் எரிந்து சேதமடைந்துள்ளன.

கல்லூரணி ஊராட்சி மன்றத்தின் தலைவராக இருந்த முருகன் கடந்த ஜூலை மாதம் இறந்துவிட்டதையடுத்து துணைத்தலைவா் பொறுப்பில் ஊராட்சி மன்ற செயல்பாடுகள் நடைபெற்று வந்துள்ளன. இந்நிலையில் புதன்கிழமை காலை சுமாா் 8 மணியளவில் பூட்டியிருந்த ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடத்திற்குள்ளிருந்து கரும்புகை வந்ததால், துணைத்தலைவா் மற்றும் செயலாளா் அலுவலகத்தைத் திறந்து பாா்த்தனா். அப்போது அங்கு கணினி, அலுவலகக் கோப்புகள் ஆகியன தீயில் எரிந்துகொண்டிருந்தன. உடனடியாக அக்கம்பக்கத்தினா் உதவியுடன் தண்ணீா் ஊற்றி நெருப்பு அணைக்கப்பட்டது. தகவலறிந்து காவல்துறையினா் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனா். இதுதொடா்பாக ம.ரெட்டியபட்டி காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com