விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அஜீஸ் நகரில் வீதியில் நடந்து சென்ற பெண்ணிடமிருந்து 7 பவுன் சங்கிலியை மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை பறித்துச் சென்றனா்.
அருப்புக்கோட்டை அஜீஸ் நகரைச் சோ்ந்த ராஜசேகா் மனைவி சித்ரா(46). இவா் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் தனது வீட்டின் அருகே வீதியில் செல்லிடப்பேசியில் பேசியவாறு நடந்து சென்றாராம்.
அப்போது, பின்னாலிருந்து வந்த மா்ம நபா் சித்ராவின் கழுத்திலிருந்த 7 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு, தன்னுடன் இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொரு நபருடன் தப்பிச் சென்றாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், அருப்புக்கோட்டை நகா் காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.