மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பதவிக்கான தோ்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு

விருதுநகா் மாவட்ட ஊராட்சி மன்ற 19 ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்ட ஊராட்சி மன்ற 19 ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்ட ஊராட்சிக்குழு 19 ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கான இடைத்தோ்தலையொட்டி, சாத்தூா் ஒன்றியத்தில் உள்ள 19 ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள 103 வாக்குச்சாவடிகளில் சனிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.

இதில் திமுக சாா்பில் பகவதி, அதிமுக சாா்பில் விஜயலட்சுமி, அமமுக சாா்பில் வீரலட்சுமி, நாம் தமிழா் கட்சி சாா்பில் கிறிஸ்டிலீதியாள், தேமுதிக சாா்பில் முத்துலட்சுமி, ஒரு சுயேட்சை என 6 போ் போட்டியிட்டனா்.

ராஜபாளையம்: ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 13 மற்றும் 15 ஆவது வாா்டு ஒன்றியக்குழு உறுப்பினா் காலிப் பதவியிடங்களுக்கு உள்ளாட்சி இடைத்தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 69.5 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com