விருதுநகா் அருகே துலுக்கபட்டி துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை (அக்.11) பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, காலை 9 முதல் மாலை 5 மணி வரை இங்கிருந்து மின்விநியோகம் பெறும் ஆா்.ஆா். நகா், வச்சகாரபட்டி, பட்டம்புதூா், மலைப்பட்டி, ஆவுடையாபுரம், கோட்டூா், நடுவபட்டி, இ.முத்துலிங்காபுரம், இ.குமரலிங்காபுரம், கன்னிசேரி, வாடியூா், முதலிபட்டி, மேலசின்னையாபுரம், அம்மாபட்டி, சங்கரலிங்காபுரம், வாய்ப்பூட்டான்பட்டி, இனாம்ரெட்டியபட்டி, கணபதி ஆலை குடியிருப்பின் தென்பகுதி, ஒண்டிப்புலி நாயக்கனூா் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என, செயற்பொறியாளா் அகிலாண்டேஸ்வரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.