சாத்தூர்: கவுன்சிலர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

சாத்தூர் தொகுதி மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.
சாத்தூர்: கவுன்சிலர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
சாத்தூர்: கவுன்சிலர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடக்கம்


சாத்தூர் தொகுதி மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் உள்ள 19வது வார்டு மாவட்ட உறுப்பினர் பதவிக்கான தேர்தல் கடந்த 9ந் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் திமுக சார்பில் பகவதி, அதிமுக சார்பில் விஜயலட்சுமி என்பவரும் ,தேமுதிக சார்பில் மகேஸ்வரி,அமமுக சார்பில் வீரலட்சுமி என்பவரும் போட்டியிட்டனர்.

இத்தேர்தலில் 51,437 வாக்காளர்கள் உள்ள நிலையில், 55 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ள நிலையில், இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று சாத்தூரில் உள்ள எட்வர்டு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது.

காலை 8 மணியளவில் துவங்கிய வாக்கு எண்ணிக்கை மாலை 3 மணி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணும் பணிகளை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரான மேகநாதரெட்டி நேரில் பார்வையிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com