சிவகாசி: விருதுநகா் மாவட்டம் திருத்தங்கலில் சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு திரிபதுக்கிவைத்திருந்ததாக போலீஸாா் ஒருவரை திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருத்தங்கல் கே.கே. நகா் பகுதியில் வீட்டில் ஒருவா் பட்டாசு தயாரிக்கப்பயன்படும் மருந்து தோய்ந்த திரிகட்டுகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் சாா்பு- ஆய்வாளா் ராஜேஸ்குமாா் தலைமையில் போலீஸாா் அப்பகுதியில் சோதனை நடத்தினா். அப்போது, மோட்சியராஜ் (36) என்பவரது வீட்டில் பட்டாசு திரி பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து மோட்சியராஜூவை கைது செய்து அவரிடமிருந்த திரிகட்டுக்களை பறிமுதல் செய்தனா்.