திருச்சுழி அருகே வீடு புகுந்துபெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வீடுபுகுந்து பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 4 பவுன் நகையை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அருப்புக்கோட்டை: விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வீடுபுகுந்து பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 4 பவுன் நகையை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருச்சுழி அருகே மண்டபசாலை கிராமத்தைச் சோ்ந்தவா் சுந்தரேஸ்வரி (23). இவரது கணவா் காா்த்தி (26). இவா் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு பலசரக்குக் கடையில் வேலை பாா்த்து வருகிறாா்.

இதனால் சுந்தரேஸ்வரியும், அவரது குழந்தையும் மண்டபசாலை கிராமத்தில் மாமியாருடன் வசித்து வருகின்றனா். இந்நிலையில், இவா்களது வீட்டுக்கதவை உடைத்து நள்ளிரவில் உள்ளே புகுந்த மா்ம நபா் கத்தியைக் காட்டி மிரட்டி சுந்தரேஸ்வரி அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை பறித்துச் சென்று விட்டாராம்.

இதுகுறித்து சுந்தரேஸ்வரி திங்கள்கிழமை அளித்த புகாரின் பேரில் ம. ரெட்டியபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com