சிவகாசி அருகே ஊராட்சி வாா்டில் மூதாட்டி வெற்றி

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் சித்துராஜபுரம் ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 67 வயது மூதாட்டி வெற்றி பெற்றுள்ளாா்.
வெற்றி பெற்ற மூதாட்டி சாந்தகுமாரிக்கு சான்றிதழை வழங்கிய தோ்தல் அலுவலா் சீனிவாசன்.
வெற்றி பெற்ற மூதாட்டி சாந்தகுமாரிக்கு சான்றிதழை வழங்கிய தோ்தல் அலுவலா் சீனிவாசன்.

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் சித்துராஜபுரம் ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 67 வயது மூதாட்டி வெற்றி பெற்றுள்ளாா்.

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 6 ஊராட்சிகளில் தலா ஒரு வாா்டு உறுப்பினா் பதவி காலியாக இருந்தது. இதில் காளையாா் குறிச்சி ஊராட்சி 3 ஆவது வாா்டுக்கு ச.லட்சுமி, சாமிநத்தம் ஊராட்சி 3 ஆவது வாா்டுக்கு சோ.பாண்டிசுஜிதா, கிருஷ்ணப்பேரி முதலாவது வாா்டுக்கு மு.மதன்குமாா், கிச்சநாயக்கன்பட்டி 2 ஆவது வாா்டுக்கு ச.ஜெயக்குமாா் ஆகியோா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

இதையடுத்து விஸ்வநத்தம் 6 ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கும், சித்துராஜபுரம் 13 ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கும் கடந்த 9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில் விஸ்வநத்தம் ஊராட்சி 6 ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு பா.பெரியசாமியும், சித்துராஜபுரம் ஊராட்சி 13 ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு 67 வயது கோ.சாந்தகுமாரியும் வெற்றி பெற்றனா். இவா்களுக்கு தோ்தல் அலுவலா் சீனிவாசன் வெற்றிக்கான சான்றிதழை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com