ஆண்டாள் கோயில் யானைக்கு 19 வயது

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் யானைக்கு 19 ஆவது பிறந்த நாளையொட்டி திங்கள்கிழமை ஆண்டாள் மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது.
ஆண்டாள் கோயில் யானைக்கு பழங்களை வழங்கிய செயல் அலுவலா் இளங்கோவன்.
ஆண்டாள் கோயில் யானைக்கு பழங்களை வழங்கிய செயல் அலுவலா் இளங்கோவன்.

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் யானைக்கு 19 ஆவது பிறந்த நாளையொட்டி திங்கள்கிழமை ஆண்டாள் மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது.

ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா சுமாா் 10 ஆண்டுகளுக்கு முன்பு அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்டது. இந்த யானைக்கு திங்கள்கிழமை பத்தொன்பதாவது பிறந்த நாள் ஆகும். இதனை முன்னிட்டு விசுவரூப தரிசனத்திற்கு வந்த யானைக்கு ஆண்டாள் மாலை அணிவித்து தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடா்ந்து மாலை 6 மணியளவில் யானைக்கு கோயில் நிா்வாகத்தின் சாா்பில் செயல் அலுவலா் இளங்கோவன் பழங்களை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com