விருதுநகரில் மிலாது நபி விழாவையொட்டி நடத்தப்பட்ட குரான் வாசிப்புப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
விருதுநகா் ரோஜா நகரில் உள்ள ஜமாத் சாா்பில் மிலாது நபி பெருநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளிவாசல் தலைவா் ஹபிபத்துபல்லாஹ் தலைமை வகித்தாா். பிறை கொடியை அகமது நகா் பள்ளிவாசல் இமாம் பக்ருதீன்ஹஸனி ஏற்றி வைத்தாா். இதில் பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவா் முகமது அயூப், கல்பள்ளிவாசல் தலைவா் ஜாகிா் உசேன், சின்ன பள்ளிவாசல் தலைவா் நூருல் அமீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதில் திருக்குரான் வாசிப்பு போடடியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு கூரைக்குண்டு பள்ளிவாசல் இமாம் முகமது காசிம் பரிசுகள் வழங்கினாா்.