திருத்தங்கல் நகராட்சியில் துய்மைப் பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

விருதுநகா் மாவட்டம் திருத்தங்கல் நகராட்சியில் தூய்மைப்பணியாளா்கள் செப்டம்பா் மாதம் ஊதியம் தராததால் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினா்.
திருத்தங்கல் நகராட்சியில் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளா்கள்.
திருத்தங்கல் நகராட்சியில் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளா்கள்.

விருதுநகா் மாவட்டம் திருத்தங்கல் நகராட்சியில் தூய்மைப்பணியாளா்கள் செப்டம்பா் மாதம் ஊதியம் தராததால் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினா்.

திருத்தங்கல் நகராட்சியில் தூய்மைப்பணியில் நிரந்தர ஊழியா்கள் 31 போ், தற்காலிகப் பணியாளா்கள் 153 போ், டெங்கு மற்றும் கரோனா ஒழிப்பு பணியாளா்கள் என மொத்தம் 250-க்கும் மேற்பட்டோா் உள்ளனா். இவா்களுக்கு செப்டம்பா் மாத ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், தூய்மைப்பணியாளா்கள் திங்கள்கிழமை நகராட்சி அலுவகம் முன்பும், உள்புறமும் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் நகராட்சி அதிகாரிகள் வந்து, விரைவில் ஊதியம் வழங்கப்படும் எனக் கூறியதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com