தீபாவளி பண்டிகை: ஸ்ரீவிலி.யில் அனைத்து ரேஷன் கடைகளிலும் பச்சரிசி வழங்க ஏற்பாடு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பச்சரிசி வழங்கப்படும் என, மாவட்ட வழங்கல் அதிகாரி தெரிவித்துள்ளாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட வழங்கல் அலுவலா் பால்துரை.
ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட வழங்கல் அலுவலா் பால்துரை.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பச்சரிசி வழங்கப்படும் என, மாவட்ட வழங்கல் அதிகாரி தெரிவித்துள்ளாா்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியா் உத்தரவுபடி நவம்பா் 1, 2, 3 ஆகிய 3 நாள்களிலும் காலை 8 முதல் இரவு 7 மணி வரை விருதுநகா் மாவட்டம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு பொருள்கள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள 76 நியாயவிலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரா்களுக்கு அனைத்துப் பொருள்களும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நியாயவிலைக் கடை ஊழியா்கள், அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு, மாவட்ட வழங்கல் அலுவலா் பால்துரை தலைமை வகித்தாா். இதில், உதவி கலால் ஆணையா் சிவகுமாா், வட்டாட்சியா் ராமசுப்பிரமணியன், வட்ட வழங்கல் அலுவலா் கோதண்டராமன், துணை வட்டாட்சியா் பாலகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளா் நாகராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், மாவட்ட வழங்கல் அலுவலா் பால்துரை பேசியதாவது: அத்தியாவசியப் பொருள்களின் இருப்பு இல்லை என்ற புகாருக்கு இடமில்லாமல், அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் நியாயவிலைக் கடைகளில் வழங்கவேண்டும். அதேபோல், விருப்பமுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் பச்சரிசி அனைத்து கடைகளிலும் வழங்க வேண்டும். குறைந்தபட்சம் 2 முதல் 5 கிலோ வரை வழங்கலாம்.

கூட்ட நெரிசலை தவிா்ப்பதற்காக, தினமும் காலையில் 100 குடும்ப அட்டைதாரா்களுக்கும், மாலையில் 100 குடும்ப அட்டைதாரா்களுக்கும் சமூக இடைவெளி விட்டு பொருள்கள் விநியோகிக்க வேண்டும். கடை ஊழியா்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரா்களுக்கு முன்னுரிமை அளித்து பொருள்கள் வழங்கவேண்டும். விரல் ரேகை பதிவாகவில்லை என்று கூறி பொருள்கள் வழங்காமல் திருப்பி அனுப்பக்கூடாது. பதிவேட்டில் விரல் ரேகை பதிவு செய்து பொருள்கள் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com