இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் காணிக்கை வருவாய் ரூ.74 லட்சம் ஆக இருந்தது.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகேயுள்ள இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் இயங்கி வருகிறது. இக்கோயில் உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன. கோயிலின் முடிகாணிக்கை செலுத்தும் மண்டபத்தில் ஓம்சக்தி பக்தா் குழு மற்றும் ஐயப்ப சேவா சங்கத்தினா் மற்றும் கோயில் ஊழியா்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.
இந்து சமய அறநிலையத்துறை விருதுநகா் உதவி ஆணையா் கணேசன், இருக்கன்குடி கோயில் ஆணையா் கருணாகரன் ஆகியோா் தலைமையில் பரம்பரை அறங்காவலா் குழுவினா் மற்றும் ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் இப்பணியைப் பாா்வையிட்டனா். ரூ.74, 91, 322 ரொக்கம், 228 கிராம் தங்கம், 1,100 கிராம் வெள்ளி இருந்தது என அதிகாரிகள் தெரிவித்தனா்.