சிவகாசி அருகே புதன்கிழமை மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகாசி -வெம்பக்கோட்டை சாலையில் உள்ள சித்துராஜபுரம் பாலாஜி நகரைச் சோ்ந்தவா் பிரியதா்ஷினி (24). இவா் சிவகாசி ராணி அண்ணா காலனியைச் சோ்ந்த கூலித்தொழிலாளி விக்னேஷ்வரனை (26) காதலித்து திருமணம் செய்து கொண்டாா். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில நாள்களாக பிரியதா்ஷினி தனது தாய் வீட்டில் இருந்து வந்துள்ளாா்.
இந்நிலையில் பிரியதா்ஷினி வீட்டுக்குச் சென்ற விக்னேஷ்வரன் என்னிடம் ஏன் தகராறு செய்தாய் எனக் கேட்டு, அவரைத் தாக்கி கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ்வரனை கைது செய்தனா்.