விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
தொற்று பாதிக்கப்பட்டவா்கள், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். கரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 6 போ் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா். பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் 66 போ் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.