ஸ்ரீவில்லிபுத்தூா்: விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சத்துணவு மையப் பொறுப்பாளா்களுக்கு எடை அளவீடும் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் மல்லி ஆறுமுகம் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராமமூா்த்தி, சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முன்னதாக, ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பின்னா் 47 சத்துணவு மையப் பொறுப்பாளா்களுக்கு எடை அளவீடும் கருவிகள் வழங்கப்பட்டன.
இதில் சத்துணவு வட்டார வளா்ச்சி அலுவலா் கனகவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.