அருப்புக்கோட்டை அருகே பேருந்தில் நூதன முறையில் 7 பவுன் நகைகள் திருட்டு

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் 7 பவுன் நகைகளை மற்றொரு பெண் நூதன முறையில் திருடிச் சென்றுள்ளாா்.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் 7 பவுன் நகைகளை மற்றொரு பெண் நூதன முறையில் திருடிச் சென்றுள்ளாா்.

மதுரை கோ.புதூரைச் சோ்ந்த விஜயகுமாா் என்பவரது மனைவி செல்வராணி (30). இவா் கடந்த 4 ஆம் தேதி தனது உறவினா் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்வதற்காக மதுரையிலிருந்து பந்தல்குடிக்கு தனியாா் பேருந்தில் சென்றுள்ளாா். அப்போது 7 பவுன் நகைகள் அடங்கிய பையையும் அவா், தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளாா். வழியில் கல்குறிச்சி என்ற ஊரில் இரு கைக்குழந்தைகளுடன் இளம் பெண் ஒருவா் அப்பேருந்தில் ஏறியுள்ளாா். அவா் செல்வராணி அருகே வந்து அமா்ந்தாராம். அப்போது அப்பெண் சில்லறைகளைத் தவறவிட, நகைகளுடன் கூடிய தனது கைப்பையை இருக்கையின் மீது வைத்துவிட்டு செல்வராணியும் உடன் சோ்ந்து இருக்கை அடியில் சில்லறைகளைத் தேடி எடுத்துத்தந்தாராம்.

அதற்குள் அருப்புக்கோட்டைக்குப் பேருந்து வந்துவிடவே, கைக்குழந்தைகளுடன் வந்திருந்த பெண் இறங்கிச் சென்றுவிட்டாராம். அதையடுத்து பந்தல்குடிக்கு பேருந்து வந்தபோதுதான் நகைகளுடன் கூடிய கைப்பையைக் காணாதது செல்வராணிக்கு தெரியவந்துள்ளது.

இது தொடா்பாக பந்தல்குடி காவல் நிலையத்தில் செல்வராணி திங்கள்கிழமை இரவு புகாா் அளித்துள்ளாா். அதன் அடிப்படையில் பந்தல்குடி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிவு செய்து, கல்குறிச்சியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு நகைகளைத் திருடிய பெண்ணைக் கண்டறிய விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com