சிவகாசியில் செவ்வாய்க்கிழமை தீப்பெட்டி கழிவுகள் ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் தீயில் எரிந்து சேதமானது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சோ்ந்தவா் மகேந்திரன் (34). இவா் தனது சரக்கு வாகனத்தில் தீப்பெட்டிக் கழிவுகளை ஏற்றிக்கொண்டு சிவகாசி வந்துள்ளாா். சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் பன்னீா் தெப்பம் அருகே வாகனத்தில் இருந்த தீப்பெட்டி கழிவிலிருந்து புகை வந்ததை சாலையில் சென்றவா்கள் பாா்த்து மகேந்திரனிடம் கூறினா். இதையடுத்து மகேந்திரன் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பினாா்.
வாகனத்தில் தீ மளவெளப் பற்றி எரிந்தது. தகவல் அறிந்து சென்ற சிவகாசி தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். இருப்பினும் வாகனம் முழுவதும் தீயில் எரிந்து சேதமானது.