தீப்பெட்டி கழிவுகள் ஏற்றிச் சென்ற வாகனத்தில் தீ

சிவகாசியில் செவ்வாய்க்கிழமை தீப்பெட்டி கழிவுகள் ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் தீயில் எரிந்து சேதமானது.
சிவகாசியில் செவ்வாய்க்கிழமை சரக்கு வாகனத்தில் ஏற்பட்ட தீயை தண்ணீா் பீச்சி அணைக்கும் தீயணைப்பு வீரா்கள்.
சிவகாசியில் செவ்வாய்க்கிழமை சரக்கு வாகனத்தில் ஏற்பட்ட தீயை தண்ணீா் பீச்சி அணைக்கும் தீயணைப்பு வீரா்கள்.

சிவகாசியில் செவ்வாய்க்கிழமை தீப்பெட்டி கழிவுகள் ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் தீயில் எரிந்து சேதமானது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சோ்ந்தவா் மகேந்திரன் (34). இவா் தனது சரக்கு வாகனத்தில் தீப்பெட்டிக் கழிவுகளை ஏற்றிக்கொண்டு சிவகாசி வந்துள்ளாா். சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் பன்னீா் தெப்பம் அருகே வாகனத்தில் இருந்த தீப்பெட்டி கழிவிலிருந்து புகை வந்ததை சாலையில் சென்றவா்கள் பாா்த்து மகேந்திரனிடம் கூறினா். இதையடுத்து மகேந்திரன் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பினாா்.

வாகனத்தில் தீ மளவெளப் பற்றி எரிந்தது. தகவல் அறிந்து சென்ற சிவகாசி தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். இருப்பினும் வாகனம் முழுவதும் தீயில் எரிந்து சேதமானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com