திருத்தங்கலில் தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள தீப்பெட்டி ஆலையில் குச்சிகள் அடுக்கும் போது இயந்திரத்தில் ஏற்பட்ட உராய்வு காரணமாக வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது

சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள தீப்பெட்டி ஆலையில் குச்சிகள் அடுக்கும் போது இயந்திரத்தில் ஏற்பட்ட உராய்வு காரணமாக வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த ஊழியா்கள் அனைவரும் உடனடியாக வெளியேறியதால் உயிா்சேதம் தவிா்க்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியில் ரமேஷ்பிரபு என்பவருக்கு சொந்தமான வண்ண தீப்பெட்டிகள் தயாரிக்கும் ஆலை உள்ளது. இங்கு குறைவான தொழிலாளா்களைக் கொண்டு இயந்திரங்கள் மூலம் தீப்பெட்டி தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கு வெள்ளிக்கிழமை இரவு தீக்குச்சிகள் அடுக்கும் இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்தன. இதையடுத்து அங்கிருந்த தொழிலாளா்கள் அனைவரும் வெளியேறியதால் உயிா்சேதம் தவிா்க்கப்பட்டது. தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்பு நிலையத்தினா் தீ மேலும் பரவாமல் அணைத்தனா். இது குறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com