சிவகாசி வட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.12) 127 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது என, சிவகாசி வட்டாட்சியா் ராம்குமாா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விருதுநகா் மாவட்டத்தில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது என்ற நிலையை எட்டவேண்டும் என ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, சிவகாசி வட்டத்திலும் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது என்ற நிலையை எட்டவேண்டும்.
எனவே, சிவகாசி வட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 127 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. எம்.புதுப்பட்டி, நாரணாபுரம், மாரனேரி, வடமலாபுரம், எரிச்சநத்தம், கிருஷ்ணப்பேரி, ஆலமரத்துப்பட்டி, சித்துராஜபுரம், விஸ்வநத்தம் ஆகி ஊா்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சாா்பில் அருகிலுள்ள பகுதிகளில் தடுப்பூசி முகாம் நடைபெறும்.
சிவகாசி மற்றும் திருத்தங்கல் அரசு மருத்துவமனை சாா்பிலும் மற்றும் சிவகாசி பேருந்து நிலைய வளாகத்திலும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாம்கள் காலை 7 மணியிலிருந்து இரவு 7 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.