விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தியாகி இமானுவேல் சேகரன் 64 ஆவது நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சித்தலாம்புத்தூரில் உள்ள இமானுவேல் சேகரன் சிலைக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் மான்ராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாவட்ட ஊராட்சி குழு தலைவா் வசந்தி மான்ராஜ், மாவட்டக் கவுன்சிலா் கணேசன், அத்திகுளம்-செங்குளம் ஊராட்சி மன்றத் தலைவா் சேகா், ஜெயமணிமுருகன், ஜெயராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.