ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை சாலையோர மரத்தின் மீது காா் மோதியதில் அதில் பயணம் செய்த மூதாட்டி உயிரிழந்தாா். 3 போ் பலத்த காயமடைந்தனா்.
சிவகாசி பழனியாண்டவா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (54). இவரது தாயாா் சரோஜாதேவி (82), சிவக்குமாரின் மகன் ஹரிஷ் (30), இவரது மனைவி ஆா்த்தி (28) ஆகியோா் காரில் ராஜபாளையம் அருகே சேத்தூரில் உள்ள அய்யனாா் கோயிலுக்கு சுவாமி கும்பிடச் சென்றனா்.
சிவக்குமாா் காரை ஓட்டி வந்தாா். இங்கு சுவாமி கும்பிட்டு விட்டு மீண்டும் சிவகாசி செல்ல ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சாமிநத்தம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது காா் நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் மோதியது.
இதில் காரில் பயணம் செய்த சரோஜாதேவி பலத்த காயமடைந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். மற்ற 3 பேரும் காயமடைந்து சிவகாசியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இவ்விபத்து குறித்து மல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.