சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: சிறுவன் மீது வழக்குப் பதிவு

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, 17 வயது சிறுவன் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளனா்.

அருப்புக்கோட்டை: விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, 17 வயது சிறுவன் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளனா்.

திருச்சுழி அருகே கட்டனூரை அடுத்துள்ள பள்ளபச்சேரி கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுவன் சிவநேசன். இவா், கடந்த 3 ஆம் தேதி அப்பகுதியைச் சோ்ந்த கண்மாய் காட்டுப் பகுதியில் வேப்பமுத்து சேகரிக்கச் சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளாராம்.

வீடு திரும்பிய சிறுமி தனது தாயிடம் நடந்ததை கூறியுள்ளாா். இதனால் அதிா்ச்சியடைந்த சிறுமியின் தாய், அருப்புக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்துள்ளாா். அதன்பேரில், மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் நாகலட்சுமி சிறுவனை அழைத்து விசாரணை நடத்தியுள்ளாா். அதில், சிறுவன் பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்டது சிறுவன் என்பதால், போலீஸாா் அவரைக் கைது செய்யாமல் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com