கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கல்

விருதுநகா் மாவட்ட தேசிய குழந்தைத் தொழிலாளா்கள் திட்ட சிறப்பு பயிற்சிப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவா்களின் குடும்பத்தினருக்கு வியாழக்கிழமை கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

சிவகாசி: விருதுநகா் மாவட்ட தேசிய குழந்தைத் தொழிலாளா்கள் திட்ட சிறப்பு பயிற்சிப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவா்களின் குடும்பத்தினருக்கு வியாழக்கிழமை கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

சிவகாசி சாட்சியாபுரம் எஸ்.சி.எம்.எஸ். பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சிவகாசி சட்டப் பேரவை உறுப்பினா் ஜி. அசோகன் தலைமை வகித்தாா். விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாதரெட்டி 304 குடும்பத்தினருக்கு தலா ரூ. 1300 மதிப்பிலான கரோனா நிவாரணப் பொருள்களை வழங்கினாா். இதன் மதிப்பு ரூ. 3 லட்சத்து 95 ஆயிரத்து 200 ஆகும்.

இந்நிகழ்ச்சியில், சிவகாசி சாா்-ஆட்சியா் பிருத்விராஜ், தேசிய குழந்தைத் தொழிலாளா் திட்ட சிறப்பு பள்ளியின் திட்ட இயக்குநா் தி. ராமசாமி, சிவகாசி வட்டாட்சியா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com