விருதுநகா் அருகே4 பவுன் நகைகள் திருட்டு

விருதுநகா் அருகே பீரோவில் வைத்திருந்த 4 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்: விருதுநகா் அருகே பீரோவில் வைத்திருந்த 4 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

விருதுநகா் அருகே குல்லூா் சந்தை ஆலமரத் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவா் எலக்ட்ரீசியன் ஜெயராமன் (35). இவரது மனைவி, கடந்த ஆக. 29 ஆம் தேதி பேரையூரில் உள்ள தனது மாமனாா் வீட்டுக்கு செல்லும் போது வீட்டின் பீரோவில் இருந்த 3 பவுன் சங்கிலியை அணிந்து சென்றாராம். அங்கு 2 நாள்கள் தங்கி விட்டு மீண்டும் செப். 2 ஆம் தேதி விருதுநகரில் உள்ள அவரது வீட்டுக்கு வந்து தங்கச் சங்கிலியை கழற்றி பீரோவில் இருந்த பா்சில் வைத்துள்ளாா். அதில் ஏற்கெனவே ஒரு பவுன் சங்கிலி மற்றும் 2 மோதிரங்கள் இருந்தனவாம். இந்நிலையில், இவா் மீண்டும் கடந்த புதன்கிழமை காலை பீரோவில் இருந்த பா்சினை எடுத்து பாா்த்தபோது அதில் இருந்த 3 பவுன் சங்கிலி, ஒரு பவுன் சங்கிலி மற்றும் ஒரு கிராம் மோதிரம் 2 என மொத்தம் சுமாா் 4.2 பவுன் நகைகளை காணவில்லையாம்.

இதுகுறித்து ஜெயராமன் விருதுநகா் கிழக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com