ஸ்ரீவில்லிபுத்தூரில் 62 கிலோபுகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் 62 கிலோ புகையிலை பொருள்களை பறிமுதல் செய்து 3 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் 62 கிலோ புகையிலை பொருள்களை பறிமுதல் செய்து 3 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆராய்ச்சிப்பட்டி காமாட்சி அம்மன் கோயில் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருப்பதாக ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் சாா்பு- ஆய்வாளா் சக்திவேலுக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீஸாா் அங்கு சென்று சுமாா் 62 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக கம்மாபட்டி நடுத்தெருவைச் சோ்ந்த கோவிந்தன் (30), ஆராய்ச்சிப்பட்டி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த சுபஆனந்த் (31), ராஜபாளையம் வடக்குமலையடிப்பட்டியைச் சோ்ந்த பாண்டியராஜன் (28) ஆகிய 3 பேரையும் கைது செய்து அவா்களிடமிருந்து ரூ. 33 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து நகா் காவல் சாா்பு- ஆய்வாளா் சக்திவேல் வியாழக்கிழமை அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com