கருநாகப்பாம்பை கழுத்தில் மாலையாக அணிந்து கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சுவாமிகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் 24 வது பட்டம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர்  சுவாமிகள் நாகப்பாம்பை கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டார்.
கருநாகப்பாம்பை கழுத்தில் மாலையாக அணிந்து கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சுவாமிகள்
கருநாகப்பாம்பை கழுத்தில் மாலையாக அணிந்து கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சுவாமிகள்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் 24 வது பட்டம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர்  சுவாமிகள் நாகப்பாம்பை கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டார்.

இந்திய நாட்டில் சாதுக்களும், சனந்நியாசிகளும் ஆண்டு தோறும்  தங்களது குருமார்களுக்கு நன்றி தெரிவிக்கவும், தங்களது ஆன்மீக பலத்தை பெருக்கிக் கொள்ளவும் சாதுர்மாஸ்ய விரதம் இருப்பது வழக்கம். இவ்விரத நாள்களின் போது சந்நியாசிகள் ஏதேனும் ஒரு இடத்தில் தங்கி விரதத்தை அனுஷ்டித்து வருவார்கள். 

அந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் 24 வது பட்டம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் இந்த விரதத்தினை உத்தரப்பிரதேச மாநிலம் நைமிசாரண்யம் என்ற இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் தங்கியிருந்து அனுஷ்டித்து வருகிறார்.

அப்போது வட மாநிலங்களில்  சாதுக்களுக்கும், சந்நியாசிகளுக்கும் சாலையோரம் தங்கியிருக்கும் பாம்பாட்டிகள் நாங்கள் பிடித்த பாம்பினை சாதுக்களுக்கு அணிவித்து மரியாதை செய்வது வழக்கம், அந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சுவாமிகளுக்கு கொடிய விஷமுள்ள கருநாகப் பாம்பினை அணிவித்து மரியாதை செய்தனர். சுவாமிகளும் அதனை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு ஆசி வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com