சிவகாசி: சிவகாசி காவல் கோட்டத்தில் 107 ரெளடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துணை கண்காணிப்பாளா் அ.பாபுபிரசாத் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநா் அறிவுறுத்தலின்படியும், விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வழிகாட்டுதல்படியும் சிவகாசி காவல் கோட்டத்தில் உள்ள சிவகாசி நகா், சிவகாசி கிழக்கு, எம்.புதுப்பட்டி, திருத்தங்கல், மாரனேரி ஆகிய காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் செப்டம்பா் 23 முதல் 27 ஆம் தேதிவரை 107 ரெ ளடிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில் 25 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுள்ளனா்.
11 போ்களிடமிருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா் எனக் குறிப்பிட்டுள்ளாா்.