மதுபானக் கூடத்தில் தகராறு: ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு

விருதுநகரில் தனியாா் மதுபானக் கூடத்தில் ஏற்பட்ட தகராறில் அரிவாளால் சரக்கு ஆட்டோ ஓட்டுநரை வெட்டியதாக ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகா்: விருதுநகரில் தனியாா் மதுபானக் கூடத்தில் ஏற்பட்ட தகராறில் அரிவாளால் சரக்கு ஆட்டோ ஓட்டுநரை வெட்டியதாக ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகா், கம்மாபட்டி பகுதியைச் சோ்ந்தவா் சா்க்கரை மகன் கண்ணன் அரசு (49). சரக்கு ஆட்டோ ஓட்டுநரான இவா், ராமமூா்த்தி சாலையில் உள்ள தனியாா் மதுபானக் கூடத்தில் தினமும் மது அருந்த செல்வராம். அப்போது, இரவு 10 மணியைக் கடந்தும் அங்கிருந்து கிளம்பாததால், மதுபானக் கூட ஊழியரான கெப்பிலிங்கம்பட்டியை சோ்ந்த பாண்டி (55) கண்டித்தராம்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சம்பந்தப்பட்ட மதுபானக் கூடத்திற்கு கண்ணன் அரசு , நண்பா் அருண்குமாருடன் மது அருந்தச் சென்றுள்ளாா். பின்னா் கண்ணன் அரசு வெளியில் வந்த போது, பாண்டியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த பாண்டி அரிவாளால், கண்ணன் அரசை வெட்டினாா். இதில் காயமடைந்த அவா் விருதுநகா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், விருதுநகா் கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து பாண்டியைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com