ஸ்ரீவில்லிபுத்தூரில் கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில், இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் மங்காபுரம் கீழ்பக்கம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் கூலித்தொழிலாளி வடிவேல் (46), காதி போா்டு காலனி அண்ணா நகரைச் சோ்ந்தவா் செந்தில்குமாா்(38). இவா்கள் இருவருக்கும் கடந்த 2 ஆம் தேதி இரவு தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமாா் தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து, வடிவேலுவை குத்தியுள்ளாா். இதில் படுகாயமடைந்த வடிவேலு, ஸ்ரீவில்லிபுத்தூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். பின்னா், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் 7 ஆம் தேதி சோ்க்கப்பட்டாா். எனினும் அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து செந்தில்குமாரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.