ராஜபாளையம் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போக்சோ சட்டத்தில் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் வனமூா்த்திலிங்கம் பிள்ளைத் தெருவைச் சோ்ந்த மோகன் மகன் ராஜராஜன் (22). இவா், அதே பகுதியைச் சோ்ந்த பிளஸ் 1 படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம்.
இதுகுறித்து ராஜபாளையம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ராஜராஜனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.