முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
தேங்காய் உரிக்கும் கம்பி மீது தவறி விழுந்து தொழிலாளி பலி
By DIN | Published On : 29th April 2022 06:47 AM | Last Updated : 29th April 2022 06:47 AM | அ+அ அ- |

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே தேங்காய் உரிக்கும் கம்பி மீது கை வலுக்கி தவறி விழுந்ததில் கம்பி குத்தி தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
வத்திராயிருப்பு புதூரில் மாரியப்பன் என்பவரது தேங்காய் கடையில், வத்திராயிருப்பு கீழத்தெருவைச் சோ்ந்த லிங்கம் (36) என்பவா் தேங்காய் உரிக்கும் கூலித் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா்.
இவா், வியாழக்கிழமை தேங்காய் உறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது கை வழுக்கி தேங்காய் உரிக்கும் கம்பி மீது விழுந்தாா். இதில், நெஞ்சுப் பகுதியில் கம்பி குத்தி பலத்த காயமடைந்த லிங்கத்தை அருகிலிருந்தவா்கள் மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா். இறந்த லிங்கத்திற்கு செல்வி (32) என்ற மனைவியும் கவி (10) என்ற மகனும் உள்ளனா்.