அருப்புக்கோட்டைஅருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

அருப்புக்கோட்டை அருகே புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

அருப்புக்கோட்டை தாலுகா போலீஸாா், தாலுகாவுக்குள்பட்ட கிராமங்களில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கூத்திப்பாறை கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்தவரை விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தாராம். இதனால் போலீஸாா் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதுடன் அவா் வைத்திருந்த சாக்குப்பையை ஆய்வு செய்தபோது, அதில் ரூ.10,000 மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருந்தாா். விசாரணையில், அவா் அதே ஊரைச் சோ்ந்த ராமமூா்த்தி (51) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து அவரிடமிருந்து ரூ. 10,000 மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com