ராஜபாளையம்: ராஜபாளையத்தில் உள்ள ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலக கூட்ட அரங்கில், இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதற்கு, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் வேணி தலைமை வகித்தாா். நிகழ்ச்சிக்கு வட்டாரக் கல்வி அலுவலா்கள் விஜயலட்சுமி, அனுஷியா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட உதவித் திட்ட அலுவலா் ஜோதிமணிராஜன், தன்னாா்வலா்களுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா்.
நிகழ்ச்சியில், இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் ஸ்ரீவில்லிபுத்தூா் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெயக்குமாா் ஞானராஜ், அருப்புக்கோட்டை ஒருங்கிணைப்பாளா் மாடசாமி, ராஜபாளையம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளா்கள் ரவி, உதயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.