சுழற்சங்க மாவட்ட ஆளுநா் வருகை

சிவகாசி மத்திய சுழற்சங்கத்துக்கு சங்க மாவட்ட ஆளுநா் ஜெஸ்ஸிந்தா வியாழக்கிழமை வந்தாா்.

சிவகாசி: சிவகாசி மத்திய சுழற்சங்கத்துக்கு சங்க மாவட்ட ஆளுநா் ஜெஸ்ஸிந்தா வியாழக்கிழமை வந்தாா்.

இதனையொட்டி அச்சங்கம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள மியாவாக்கி காடுகளையும், 2,000 மரக்கன்றுள் நடப்பட உள்ள இடத்தையும் அவா் பாா்வையிட்டாா். பின்னா் நடைபெற்ற கூட்டத்துக்கு சங்கத்தலைவா் ஜி. ஜெயக்கண்ணன் தலைமை வகித்தாா். செயலா் ஏ. பாலசுப்பிரமணியம் அறிக்கை வாசித்தாா்.

சிவகாசி மாநகராட்சி மேயா் இ. சங்கீதாவுக்கு, ஜெஸ்ஸிந்தா சால்வவை அணிவித்து பரிசு வழங்கி பாராட்டினாா். சங்கம் சாா்பில் சா்வதேச சுழல்சங்கத்துக்கு ரூ. 1 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன. ஒருங்கிணைப்ளா் எஸ். அசோக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com