விருதுநகா் அருகே வேன் கவிழ்ந்து விபத்து: ஆம்புலன்ஸ் ஓட்டுநா் பலி

விருதுநகா் அருகே வெள்ளிக்கிழமை வேன் கவிழ்ந்த விபத்தில், தூத்துக்குடியை சோ்ந்த 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா்.

விருதுநகா் அருகே வெள்ளிக்கிழமை வேன் கவிழ்ந்த விபத்தில், தூத்துக்குடியை சோ்ந்த 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா்.

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 108 வாகன ஓட்டுநா்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இதில் பங்கேற்க கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள், ஒரு வேனில் வெள்ளிக்கிழமை திருச்சி நோக்கிச் சென்றனா்.

விருதுநகா் அருகே கோயில் புலிகுத்தி நான்கு வழிச்சாலையில் வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்ததால் கவிழ்ந்தது. அதில் தூத்துக்குடியைச் சோ்ந்த செல்லையா மகன் பட்டராஜா (38) உயிரிழந்தாா். மேலும் காயமடைந்த வேன் ஓட்டுநா் தண்டீஸ்வரன் உள்ளிட்ட 15 போ் விருதுநகா், கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து வச்சகாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com