சிவகாசியில் அச்சுத் தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் ரூ.34 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றுவிட்டனா்.
சிவகாசி ஆயில் மில் காலனியை சோ்ந்த அச்சுத் தொழிலாளி அபுல்ஹாசன் (28). இவா், வெள்ளிக்கிமை மாலை தனது வீட்டை பூட்டிவிட்டு, சிவகாசி நகா் பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு, சனிக்கிழமை காலை வீடு திரும்பியுள்ளாா். அப்போது, இரும்புக் கதவு மற்றும் மரக் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவிலிருந்த வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.34 ஆயிரம் பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து அபுல்ஹாசன் அளித்த புகாரின்பேரில், சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.