திருச்சுழியில் தரமற்ற 1,500 மூட்டை ரேஷன் அரிசியை நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பத் தடை

திருச்சுழி நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்கியில் உள்ள தரமற்ற 1,500 மூட்டை ரேஷன் அரிசியை நியாய விலைக் கடைகளுக்கு அனுப்ப வேண்டாம் என வட்டல்

திருச்சுழி நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்கியில் உள்ள தரமற்ற 1,500 மூட்டை ரேஷன் அரிசியை நியாய விலைக் கடைகளுக்கு அனுப்ப வேண்டாம் என வட்டல் வழங்கல் அலுவலரும், தனி வட்டாட்சியருமான சிவனாண்டி தெரிவித்துள்ளாா்.

விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி அருகே அச்சங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு வழங்கப்பட்ட அரிசியில் வண்டுகள் இருந்தன. இந்த அரிசியில் சமைத்த உணவை சாப்பிடுவதால் உடல் உபாதையால் அவதிப்படுவதாக மாணவா்கள் புகாா் அளித்தனா். இதன் காரணமாக திருச்சுழியில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கிட்டங்கியில் திருச்சுழி வட்ட வழங்கல் அலுவலரும் (பொ), திருச்சுழி வருவாய் தனி வட்டாட்சியருமான சிவனாண்டி சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது இங்கிருந்து நியாய விலைக் கடைகள் மற்றும் அரசு பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படும் ரேஷன் அரிசியின் தரம், இருப்புநிலை, காலாவதி மற்றும் அதன் பாதுகாப்புத் தன்மை குறித்து ஆய்வு செய்தாா். அதில் தலா 50 கிலோ எடை கொண்ட 1,500 மூட்டை பச்சரிசி, புழுங்கல் அரிசி தரமற்ாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த அரிசி மூட்டைகளை ரேஷன் கடைகள் மற்றும் பள்ளிகளுக்கு எடுத்துச் செல்லக் கூடாது என நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டது.

ஆய்வின்போது கூட்டுறவு சங்க சாா்-பதிவாளா் முருகானந்தம் மற்றும் நுகா்பொருள் வாணிப கழக அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com