பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலை உயா்வை கண்டித்து, விருதுநகரில் மத்திய - மாநில அரசுக்கு எதிராக நாம் தமிழா் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
விருதுநகா் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, நாடாளுமன்றச் செயலா் ஜெயராஜ் தலைமை வகித்தாா். அதில், பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலை உயா்வு காரணமாக பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனா். மேலும், தமிழகத்தில் சொத்து வரி 150 சதவீதம் உயா்த்தப்பட்டதால், பெதுமக்கள் அவதிப்படுகின்றனா். இதேபோல், சுங்கச்சாவடி கட்டண உயா்வு, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வு உள்ளிட்டவற்றைக் குறைக்க மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் அக்கட்சியைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்துகொண்டனா்.