சிவகாசி எஸ்.எப்.ஆா்.மகளிா் கல்லூரியில் 75 ஆவது சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி கல்லூரி மாணவிகள் பலூன் மூலம் தேசிய கொடியை வடிவமைத்து காட்சிப்படுத்தினா். தேசிய ஒருமைப்பாடு எனும் தலைப்பில் நடனப் போட்டி நடைபெற்றது. பேராசிரியா்களுக்கு சுந்திர தின விழா எனும் தலைப்பில் கவிதைப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு முதல்வா் த. பழனீஸ்வரி பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினாா்.
இதற்கான ஏற்பாட்டினை பேராசிரியா் பி. ஸ்விடிலின் ஜாய் கிருஷ்டி செய்திருந்தாா். பேராசிரியா் ரெங்கேஷ்வரி நன்றி கூறினாா்.