விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
அருப்புக்கோட்டை முன்னாள் நகா் மன்றத் தலைவா் சிவப்பிரகாசம், அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளா் சகாய ஜோஸ் ஆகியோா் தலைமை வகித்து தேசியக்கொடியை ஏற்றி நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தனா். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக அருப்புக்கோட்டை நகரத் தலைவா் சலீம் சிக்கந்தா், மாவட்டத் தலைவா் மதாா்கான், மாவட்டச் செயலாளா் சல்மான்கான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை ரத்த வங்கிப்பிரிவு மருத்துவா் மற்றும் செவிலியா்கள் உரிய பரிசோதனைகளுக்குப் பிறகு கொடையாளா்களிடமிருந்து ரத்தம் பெற்றனா்.சுமாா் 60-க்கு மேற்பட்ட தன்னாா்வலா்கள் ரத்த தானம் செய்தனா்.